ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மேலும் இரு குடும்பங்களுக்கு நிரந்தர வீடு நிர்மாணித்து அவை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று (21) மன்றத்தின் தலைவரும் பிரபல சமூக செயற்பாட்டளரு மான எம். ரீ. எம். பாரிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற நிரந்தர வீடுகள் அற்ற குடும்பங்களுக்கு பாதுகாப்பானதும் நிலையுறுதியுமான நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் ‘வாழ்வதற்கான தங்குமிடம்’ (Shelter for Life project) எனும் திட்டத்தின் கீழ் மேற்படி இரு வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டது. இந்த வீட்டுத்திட்டத்திற்கு அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் பிரபல சமூக ஆர்வளர் திரு. குணரத்ணம் கந்தக்குமார் மற்றும் திருமதி பிரமிளா ஆனந்தகுமார் ஆகிய இருவரும் நிதி அனுசரணை வழங்கினர். குறித்த இரு வீடுகளும் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சல்லிக் கிராமத்திலும் விளாங்குளக் கிராமத்திலும் நிர்மாணக்கப்பட்டன. மக்கள் சேவை மன்றத்தினால் இந்த ஆண்டு வீடு அற்றவர்களுக்கு அமைத்து கொடுகும் திட்டத்தில் 42 ஆவது வீடாகும் என்பது குறிப்பிடத்தக்கது..


