அம்பாறையில் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, “சொந்தமாக இருக்க இடம் – ஓர் அழகான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவினால் நிந்தவூர், அட்டாளைச்சேனை, பாலமுனை, அக்கரைப்பற்று, காரைதீவு, நாவிதன்வெளி மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் (06) திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஐரங்கனி, பிரதேச செயலாளர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்ச்சித்திட்டம் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவினால் கடந்த காலங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.