காரைதீவு பேருந்து நிலையம் மீண்டும் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கபட்டது.

யூ.கே. காலித்தீன்

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் தரம் 12 கணிதப் பிரிவில் கல்வி கற்கும் செல்வன். என். முஹம்மட் ஷஹீம் நாஜிஹ் என்கின்ற சிரேஸ்ட சாரண மாணவனின் இலங்கை சாரணர் சங்கத்தின் 2025ம் ஆண்டுக்கான ஜனாதிபதி சாரணர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான ஜனாதிபதி சாரணர் விருது சமூக சேவை செயற்திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச சபைக்கு உட்பட்ட காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலையத்திற்கு முன்பாக சிதைவடைந்து காணப்பட்ட பேருந்து நிலையத்தினை மாணவன் என். முஹம்மட் ஷஹீம் நாஜிஹ்வினால் கடந்த 30.09.2025ம் திகதி புனர்நிர்மானம் செய்து கையளிக்கப்பட்;டது.

மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கௌரவ. எஸ். பாஸ்கரன் கலந்து கொண்டு பேருந்து நிலையத்தின நாடா வெட்டி பொதுமக்கள் பாவணைக்காக திறந்து வைக்கப்பட்டது.

கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச சபையின் உதவி தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் என்.எம்.எம். ரனிஸ், அக்கரைப்பற்று – கல்முனை சாரணர் சங்கத்தின் உதவி மாவட்ட ஆணையாளர் திரு. ஐ.எல். முஹம்மட் இப்றாஹீம், காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலைய அதிபர் திரு. எஸ். திருக்குமார், சாரணர் தேசிய பயிற்சிக்குழு உறுப்பினர் திரு. கே.எம்.தமீம், ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.எச்.எம். ஹாமீம் மற்றும் சிரேஸ்ட, கனிஸ்ட சாரண மாணவர்கள் இதன் போது கலந்து கொண்டனர்.

சாரணிய மானவனின் இவ்வாறான செயற்திட்டங்கள் இனங்களுக்கிடையே சகவாழ்வையும் நல்லுறவைபேனும் செயற்பாடாகும் எனவும் நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் பாரட்டியதை காணக் கூடியதாக இருந்தது