வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை யொட்டிய எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று (9) செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமாகியது.
நாளை புதன்கிழமை (10) எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறும்.
நாளை மறுநாள் (11) வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம் குடமுழுக்கு நடைபெறும்.
அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த திருமதி கமலாதேவி விவேகானந்தம் குடும்பத்தினர் இவ்வாலயத்தை நிருமாணித்துள்ளனர்.
ஆலய பரிபாலன சபையின் தலைவர் கி.ஜெயசிறில் முன்னிலையில் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகியது.
கும்பாபிஷேக கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் ஆலோசனையில் கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ இரத்தின மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ சபா கோவர்த்தன சர்மா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.


