எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டமானது நேற்று (27.08.2025) 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.
பிரதேச செயலாளரின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசசெயலக ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஞனமுத்து சிறிநேசன் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக தவிசாளர் மற்றும் திணைக்களத் தலைவர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கடந்த பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய நிலை குறித்து ஆராயப்பட்டது.
அத்தோடு பிரதேச செயலக பிரிவில் தற்போது நடைபெறுகின்ற அபிவிருத்தி செயற்பாட்டுத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான முன்னேற்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டன. மேலும் பிரதேச மட்டத்திலான திணைக்களங்களின் தற்போதைய பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு அதற்கான தீர்வுகள் மற்றும் ஆலோசனைகள் முன்மொழியப்பட்டன.


