இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு தொகை சிகரெட் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்த முயன்ற, ஆறு கோடி இந்திய ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் பைக்கட் மூட்டைகளை மரைன் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை வழியாக இலங்கைக்கு பல கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் பைக்கட் மூட்டைகள் கடத்தப்படுவதாக மரைன் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

இந்நிலையில், வேம்பார் சோதனை சாவடியில், மரைன் பொலிஸார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதிவேகமாக சென்ற சிறிய லொறியொன்றை நிறுத்தி பொலிஸார் சோதனை செய்தனர். அதில், 32 மூட்டைகளில் வெளிநாட்டு சிகரெட் மூட்டைகள் இருந்துள்ளன.

அந்த வாகனத்தின் சாரதியான கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தியர்புரம் பகுதியை சேர்ந்த 52 வயதானவரை பொலிஸார் கைது செய்தனர்.

சிகரெட் பைக்கட் மூட்டைகள் படகு மூலம் இலங்கைக்கு கடந்த இருந்தது தெரிந்ததுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் பைக்கட் மூட்டைகளின் பெறுமதி சுமார் 6 கோடியே 40 லட்சம் இந்திய ரூபாய் என மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.