விஷமிகாளால் சேதப்படுத்தப்பட்ட பெயர்ப்பலகை!

நாவிதன்வெளி சம்மாந்துறை பிரதேச எல்லை கிராமமான வீரச்சோலை கிராமத்தின் பெயர் பலகையை கூரிய ஆயுங்கள் கொண்டு தகர்ப்பட்டுள்ளதனை நாவிதன்வெளி பிரதேச சபை இந்திரன் ரூபசாந்தன் தவிசாளர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.

தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழும் இந்த பிரதேசத்தில் இவ்வாறான விஷமத்தனமான செயற்பாடுகள் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் செயற்பாடாக அமையும் எனவும் இவ்வாறான விசமத்தனமான செயற்பாடுகள் மூலம் இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது என தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருகக்கு தெரியப்படுத்த போவதாக கூறிப்பிட்டார்.

இதன்போது நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் கோபாலசிங்கம் உதயகுமார், நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.