கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் கன்னி அமர்வு அமளி துமளியுடன் இன்று

ருத்திரன்
மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் கன்னி அமர்வு அமளி துமளியுடன் இன்று (30.06.2025) நடைபெற்றது.
தவிசாளர் முகமட் ஹனிபா முகமட் பைறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் 19 உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் கலந்து கொள்ள வில்லை. தவிசாளர் தமது கன்னி உரையிi;போது முன்மாதிரியானதும் முன்னேற்ற கரமானதும் அபிவிருத்தி அடைந்ததுமான எமது சபை தேசிய அடையாளத்தையும் கௌரவமும் பெறும் வகையில் நாம் பணியாற்ற வேண்டிய பொறுப்பினையும் கடமைப்பாட்டினையும் கொண்டுள்ளோம் என்றார்.
இந்த சபையில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா 5 நிமிடங்கள் உரையாற்றுவதற்கு தவிசாளரினால் சந்தர்ப்பம் வழஙகப்பட்டது.இதன்போது வெற்றிக்காக வாக்களித்த மக்களுக்கும் கழகங்களுக்கும் முக்கியஸ்த்தர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன் தங்கள் வட்டாரங்களில் நிலவும் குறை குறித்தும் எடுத்துரைத்தனர்.இதேவேளை தவிசாளர் தெரிவு தொடர்பாக அவருக்கு எதிரான வார்த்தை பிரயோகங்களை ஜக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் சபையில் பகிரங்கமாக முன்வைத்தனர்.இதன்போது அவர்களுக்கு எதிராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தவிசாளருக்கு ஆதரவான வாதங்களை முன்வைத்தனர்.இதன்போது சபையில் அமளி துமளி அடிக்கடி ஏற்பட்டது.தவிசாளர் சபையினை கட்டுப்படுத்தி தொடர்ந்து சபை அமர்வினை திறன்பட வழி நடாத்தினார்.
இச்சபையினை சிறப்பாக வழி நடாத்துவதற்காக நிதிக்கொள்கை உருவாக்கம் மற்றும் நிர்வாகம்,வீடமைப்பு சமூக அபிவிருத்தி பௌதீக உட்கட்டமைப்பு,டிஜிட்டல் லைசிங் ஒன்லைன் சேவீஸ்,சுற்றாடல் வசதிகள் நீர்விநியோகம் மின்சாரம் பொது பயன்பாடு மற்றும் அணர்த்த முகாமைத்துவம்,சுகாதரமும் திண்மக் கழிவு முகாமைத்துவமும்,பெண்கள் சிறுவர் முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் நல மேம்பாடு,இளைஞர் அபிவிருத்தி போதை ஒழிப்பு பொது மக்கள் குறைகேள் சட்ட ஒழுங்கு பேணல் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு மோசடி,சொத்துக்கள் பராமரிப்பு ஊழியர் ஒழுக்காற்று மற்றும் உள்ளக கட்டுப்பாடு,முதலீடு பொருளாதார அபிவிருத்தி மற்றும் வருமான உருவாக்க ஆலோசனைக் குழு,கல்வி மேம்பாட்டு குழு ஆகிய 10 விடயங்களை கையாள்வதற்காக சபை உறுப்பினர்களையும்,விடயம் தொடர்பான அறிவுள்ள வெளிநபர்களையும் உள்ளடக்கியதான தவிசாளரை தலைமையாகக் கொண்டு 10 குழுக்கள் அமைக்கப்பட்டன.
சபையில் தற்போது கடமையாற்றும் செயலாளர் தொடர்ந்து இச் சபையில் கடமையாற்றுவதற்கு சபையில் ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.மாதாந்த சபைக் கூட்டமானது மாதக் கடைசியில் வரும் வியாழக் கிழமையும் அவ் நாட்களில் லீவு நாளாக கருதினால் புதன் கிழமைகளில் நடாத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.மஜ்மா நகர் சூடு பத்தினசேனை கொரோனா மையவாடிக்கு அலுவலக ஊழியர்களை கடமைக்கு அனுப்புவதை இடை நிறுத்தி தனியார் நிறுவன காவலாளி ஒருவரை பாதுகாப்பு கடமைக்காக நியமிப்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.சபையின் கொடுக்கல் வாங்கல் நிதி காசோலை நடவடிக்கைக்காக பொருத்தமான உத்தியோகத்தர்களை நியமித்தல்,பி.எஸ்.டி.ஜி.வேலைத்திட்டம் மீளாய்வு மற்றும் மீராவோடை வாராந்த சந்தை தொடர்பான ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல் நிலையை தீர்பதற்கு விசேட கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்வரும் வியாழக் கிழமை விசேட சபை அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
19 உறுப்பினர்களைக் கொண்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி – 08, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 06, தேசிய மக்கள் சக்தி – 02 , என உறுப்பினர்களை கொண்டுள்ளன.
இலங்கை தமிழ் அரசு கட்சி,; ஜக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேட்சை குழு என்பன தலா ஒரு உறுப்பினர்களைக் கொண்டுள்ளன.
0771607517. 30.06.2025.