‘வீதி விபத்துகளை தவிர்ப்போம்’ – மன்னாரில் விழிப்புணர்வு

( வாஸ் கூஞ்ஞ) 29.06.2025

தற்பொழுது நாட்டில் நாளாந்தம் வீதி விபத்துக்கள் அதிகரிக்கப்பட்டு வருவதால் பலர் கொல்லப்பட்டும் காயங்களுக்கு உள்ளாகி வருவதும் கண்கூடான காட்சிகளாக காணப்பட்டு வருகின்றன.

இவற்றை கவனத்திற் கொண்ட மன்னார் உயிலங்குளத்தில் இயங்கும் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் (யுவுஐ) மாணவர்களின் ஏற்பாட்டில்இ ‘வீதி விபத்துகளை தவிர்ப்போம்’ எனும் தலைப்பில் ஒரு விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் சனிக்கிழமை (28.06.2025) காலை 9.00 மணிக்கு மன்னார் பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது வீதி விபத்துகளுக்கான முக்கியமான காரணங்கள்இ அதன் தீவிர விளைவுகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த நாடகம்இ பாடல்களை மாணவர்கள் நிகழ்த்தினார்கள்.

மேலும்இ வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்தும் முக்கியத்துவம்இ போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்கும் அவசியம் மற்றும் அவற்றை மீறுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வுஇ பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடையே பொறுப்பான போக்குவரத்து பழக்கங்களை வளர்க்கும் நோக்கில் ஒரு முக்கியமான முயற்சியாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.