தனியார் பஸ் மீது மரம் விழுந்ததில் பஸ்சுக்கு பலத்த சேதம்

(க.கிஷாந்தன்)

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த தனியார் பஸ் மீது மரம் விழுந்ததில் பஸ்சுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் நிவ்வெளி பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் ஒன்றின் மீது மரம் விழுந்ததால், மரம் வெட்டப்படும் வரை (30) மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டிருந்தது.

மரம் முறிந்த நேரத்தில் பஸ்ஸில் யாரும் இல்லை என்றும், மரம் முறிந்து விழுந்ததால் பஸ் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.